மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

திருப்பட்டினம் குடியிருப்புப் பகுதிகளில் தார்ச்சாலைப் பணிகள்: கீதாஆனந்தன் ஆய்வு

திருப்பட்டினத்தின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்றுவரும் தார்ச் சாலை அமைப்புப் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் திங்கள்கிழமை பார்வையிட்டார்.

Updated On :21 மே 2018, 7:05 pm

திருப்பட்டினத்தின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்றுவரும் தார்ச் சாலை அமைப்புப் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் திங்கள்கிழமை பார்வையிட்டார்.
நிரவி-திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட திருப்பட்டினம் வட்டாரத்தில் பல சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல், ஆங்காங்கே சிதிலமடைந்து, போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அந்தந்தப் பகுதியினர் சட்டப்பேரவை உறுப்பினரிடம் புகார் தெரிவித்தனர்.
குறிப்பாக வரதராஜப் பெருமாள் கோயில் தெரு, கீழத்தெரு, சிவன் கோயில் தெற்குத் தெரு ஆகிய பகுதிகள் மிக மோசமாக இருந்த நிலையில், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.21 லட்சத்தில் சாலைகளை மேம்படுத்த பேரவை உறுப்பினர் நிதி ஒதுக்கீடு செய்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாலைப் பணிகளை திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் புதுப்பிக்கத் தொடங்கியது. இதில் தற்போது தார்ச்சாலை மேம்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன.
இப்பணியை சட்டப்பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன் திங்கள்கிழமை பார்வையிட்டார்.
கொம்யூன் பஞ்சாயத்து பொறியாளர்கள் குழுவினர், தார்ச்சாலையின் தரம் குறித்தும், பணிகளின் நிறைவு காலம் குறித்தும் பேரவை உறுப்பினருக்கு விளக்கிக் கூறினர். பொறியாளர்கள் குழுவினர் பணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்கவேண்டும். பணிகளை விரைவாக செய்து முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நீண்ட காலமாக குடியிருப்புப் பகுதியில் இதுபோன்ற தார்ச்சாலையை காணமுடியாத நிலை இருந்ததாகவும், தரமான முறையில் சாலை அமைப்புக்கு நடவடிக்கை எடுத்தமைக்காக, பேரவை உறுப்பினரை அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் பலர் சந்தித்து நன்றிதெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.