காரைக்காலில் திருமணமாகி ஒன்றரை மாதத்தில் பெண் உயிரிழந்தது தொடர்பாக வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
காரைக்கால் சின்னக்கோவில்பத்துப்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கூட்டுறவு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பேரளம் அருகே உள்ள மகாராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (22) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜெயஸ்ரீ ஏற்கெனவே மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி ஒன்றரை மாதமே ஆவதால், துணை வட்டாட்சியர் நம்புதிரி திரிபாதி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

அதிமுகவில் அணிமாறிய 3 எம்எல்ஏக்கள்? எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பின்னடைவு!

ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையதுதான்: சுரேஷ் ரெய்னா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


