அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

காரைக்கால் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

Updated On :3 செப்டம்பர் 2018, 12:53 am

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, உத்ஸவர் நித்யகல்யாணப் பெருமாள், நர்த்தன கண்ணன், குழந்தை வடிவிலான கண்ணனுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சிறப்பு திருமஞ்சனத்தையொட்டி, பெருமாள் மற்றும் கண்ணனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குழந்தை வடிவிலான கண்ணனை, பக்தர்கள் அருகில் சென்று தொட்டு வழிபட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கைலாசநாதர் கோயில், நித்யகல்யாணப் பெருமாள் அறங்காவல் குழுவினர், நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் ஆகியோர் செய்திருந்தனர். இதுபோன்று நிரவி கரியமாணிக்கப் பெருமாள் கோயில், திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், வீழிவரதராஜப் பெருமாள் கோயிலிலும் கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், குழந்தை வடிவிலான கண்ணன் வழிபாடு நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.