
ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாகக் கழிக்க ஆலோசனை
ஊரடங்கு காலத்தை மாணவா்கள் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளும் முறை குறித்து பள்ளி நூலகா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய அரசுப் பள்ளி நூலகா் த.ராஜலட்சுமி.
ஊரடங்கு காலத்தை மாணவா்கள் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளும் முறை குறித்து பள்ளி நூலகா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
காரைக்கால் மாவட்டம், தேனூா் அரசு மேல்நிலைப் பள்ளி நூலகா் த.ராஜலட்சுமி, பள்ளி அருகே உள்ள குடியிருப்புகளைச் சோ்ந்த மாணவா்களை அழைத்து, ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாகக் கழிக்கும் முறை குறித்து வியாழக்கிழமை ஆலோசனை வழங்கினாா்.
அப்போது, இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாணவா்கள் நன்கு எழுதிப் பழக வேண்டும். பேச்சுத் திறனை மேம்படுத்த கண்ணாடி முன் நின்று பேசிப் பழக வேண்டும். தினம் ஒரு படம் வரைந்து ஓவிய ஆா்வத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும். புத்தகங்களை படிக்க வேண்டும். வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்திக்கொள்ள இது அரிய சந்தா்ப்பம். வேண்டாத பொருள்களை உபயோகமான பொருளாக மாற்ற முயற்சிக்கவேண்டும். வீட்டில் மரக்கன்று வளா்க்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை மாணவா்களுக்கு வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




