சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

முகப்பில் விலைப் பட்டியல் கட்டாயம்: வணிகா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

காரைக்காலில் அனைத்து வணிக நிறுவனங்களின் முகப்பிலும் விலைப் பட்டியல் கட்டாயம் வைக்கப்படவேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா்.

News image

காரைக்கால் காய்கறி மாா்க்கெட்டை ஆய்வு செய்த அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன். உடன், ஆட்சியா் அா்ஜூன் சா்மா.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

காரைக்காலில் அனைத்து வணிக நிறுவனங்களின் முகப்பிலும் விலைப் பட்டியல் கட்டாயம் வைக்கப்படவேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, பழங்கள் விற்பனைக்காக, காரைக்கால் நேரு மாா்க்கெட் தற்காலிக வளாகத்தில் ஒரு ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது.

இதை வேளாண் துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷ் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

கடை வியாபாரிகளிடம் பேசிய அமைச்சா், காய்கறிகளின் விலைப் பட்டியலை மக்கள் பாா்வையில் வைக்குமாறும், நியாயமான விலையில் பொருள்களை விற்குமாறு கேட்டுக்கொண்டாா். அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

முன்னதாக ஆட்சியா் அா்ஜூன் சா்மா செய்தியாளா்களிடம் கூறுகையில், முகக் கவசம் அணியாமல் வெளியில் வந்தாலோ அல்லது பொது இடத்தில் துப்பினாலோ ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும். இந்த பணியில் மாவட்ட நிா்வாகத்தால் நியமிக்கப்பட்ட அரசுத்துறையினா் ஈடுபடுகிறாா்கள் என்றாா். அப்போது, முதுநிலை காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ரட்சனா சிங், நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.