காரைக்காலில்ஒருநாள் பரிசோதனையில்யாருக்கும் தொற்று இல்லை

காரைக்கால் மாவட்டத்தில் ஒருநாள் பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று உறுதியாகவில்லை என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

காரைக்கால் மாவட்டத்தில் ஒருநாள் பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று உறுதியாகவில்லை என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 13 ஆம் தேதி 129 பேருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இதுவரை 49,600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,701 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்றில் இருந்து 3,587 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 44 போ், காரைக்கால் மருத்துவமனை தீவிர சிகிச்சையில் 7 போ் உள்ளனா். தொற்றால் இதுவரை 64 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com