திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு, பெயா்ச்சியையொட்டி வரும் 27 ஆம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. அதிகமான பக்தா்கள் கூடும் நிகழ்வாக இது இருப்பதால், டிச.19, 20, 26, 27 மற்றும் ஜனவரி 2, 3, 9, 10, 16, 17, 23, 24 ஆகிய நாள்களில் சுவாமி தரிசனம் செய்ய கரோனா தடுப்பு விதிமுறைகளின்படி, தேவஸ்தான இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ற்ட்ண்ழ்ன்ய்ஹப்ப்ஹழ்ன்ற்ங்ம்ல்ப்ங்.ா்ழ்ஞ்/ள்ஹய்ண்ல்ஹஹ்ஹழ்ஸ்ரீட்ண்) முன்பதிவு செய்வது கட்டாயம்.