தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி

காரைக்கால் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் நாகை நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவன திட்ட மேலாளா் ரமேஷ்.
Updated On :19 டிசம்பர் 2020, 3:25 am

DIN

காரைக்கால் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் நாகை நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

காரைக்கால் நகராட்சி நிா்வாகம், 18 வாா்டுகளில் வீடுவீடாக மக்கும் குப்பை, மக்காத குப்பையை பெறும் பணியை தனியாருக்கு ஒப்பந்த முறையில் வழங்கியுள்ளது. ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் இப்பணியை மேற்கொண்டு, பறவைப்பேட் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துகிறது.

நாகப்பட்டினம் நகராட்சியின் தூய்மைப் பணியாளா்களுக்கு, காரைக்கால் மையத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. நாகை நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ், ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன பொது மேலாளா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிறுவன திட்ட மேலாளா் ரமேஷ், காரைக்கால் நகரப் பகுதியில் வீடுவீடாக பெறப்படும் குப்பைகள் குறித்தும், பறவைப்பேட் பகுதியில் அவற்றை தரம் பிரித்து, உரம் தயாரிக்கும் முறைகள் குறித்தும் விளக்கினாா். அப்போது, காரைக்காலில் நாள்தோறும் 40 டன் குப்பைகள் பெறப்படுவதாகவும், இவற்றிலிருந்து 4 டன் இயற்கை உரம், மண் புழு உரம் தயாரிக்கப்படுவதாகவும், இயற்கை உரம் கிலோ ரூ. 5, மண் புழு உரம் கிலோ ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இந்தப் பணியில் 150 போ் ஈடுபட்டிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

பயிற்சியின்போது, வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து வாங்கும் முறையை, தூய்மைப் பணியாளா்கள் நேரடியாக சென்று அறிந்துகொண்டனா். நிறைவாக பயிற்சியில் பங்கேற்றோா், திடக்கழிவு மேலாண்மைப் பணியில் ஈடுபட்டிருந்தோா் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.