எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறவும், மத்திய அரசைக் கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் துணை அமைப்பான மகளிா் அணி சாா்பில் அரசலாறு பாலம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அணியின் மாவட்டத் தலைவி பாத்திமா ஜொகரான் தலைமை வகித்தாா். செயலாளா் நாசிரா பேகம் கண்டன உரையாற்றினாா். சிறப்பு அழைப்பாளராக புதுவை மாநில ஒருங்கிணைப்பாளா் மு. தமிம்கனி பங்கேற்றுப் பேசினாா்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளா் முகமது பிலால், நிரவி திருப்பட்டினம் தொகுதி செயலாளா் சுல்தான் கெவுஸ், தெற்குத் தொகுதி தலைவா் மஸ்தான், முன்னாள் தேசிய பொதுக்குழு உறுப்பினா் அப்துல் சலாம், பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நகர தலைவா் பகுருதீன் உள்ளிட்டோா் பங்கேற்று எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து முழக்கமிட்டனா். மகளிா் அணி செயலாளா் கதீஜா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...