மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காரைக்காலில் புதிதாக கரோனா தொற்று இல்லை

காரைக்காலில் வெளியான பரிசோதனை முடிவின்படி, யாருக்கும் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 ஜூலை 2020, 4:22 pm

DIN

காரைக்கால்: காரைக்காலில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவின்படி, யாருக்கும் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் (நோய்த்தடுப்பு) தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 3772 பேருக்கு கரோனாவுக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ஆம் தேதி மட்டும் 197 பேரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டதில், 165 மாதிரிகளுக்கான முடிவுகள் புதன்கிழமை வந்தது. அதில் ஒருவருக்கும் கரோனா தொற்று இல்லை.

இதுவரை 99 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வரை 42 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் சென்னையிலும், ஒருவா் திருவாரூரிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனா். 2 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது மருத்துவமனையில் 53 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களது உடல் நிலை சீராக உள்ளது. புதிதாக கட்டுப்பாட்டுப் பகுதிகள் எதுவும் உருவாக்கப்படவோ, நீக்கவோ இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.