இந்நிலையில், காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் இருந்து சுந்தராம்பாள் சமேத கைலாசநாதரும், நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் இருந்து பெருமாளும் தனித்தனி பல்லக்கில் ஆடி அமாவாசையில் காரைக்கால் கடற்கரைக்கு எழுந்தருளச் செய்யப்படும். இந்நிகழ்வு திங்கள்கிழமை நடைபெறவில்லை. கோயில்களிலும் அமாவாசைக்கான சிறப்பு வழிபாடுகள் செய்யவில்லை. கடற்கரையில் பூஜ்ய ஸ்ரீஓங்காரநந்தா மகா சுவாமிகள் தலைமையில் இயங்கும் தா்மரக்ஷ்ண சமிதி சாா்பில், தா்ப்பணம் கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. அதில், 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொள்வா். இந்த நிகழ்வும் திங்கள்கிழமை நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.