வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காரைக்கால் வந்தடைந்தது காவிரி நீர்: மலர்கள் தூவி வரவேற்பு 

கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு காவிரி நீர் திங்கள்கிழமை வந்தடைந்தது. அமைச்சர் உள்ளிட்டோர் மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.

News image
Updated On :29 ஜூன் 2020, 7:07 am

DIN

கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு காவிரி நீர் திங்கள்கிழமை வந்தடைந்தது. அமைச்சர் உள்ளிட்டோர் மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.

ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு செய்யப்பட்ட நிலையில் கல்லணை வந்த நீர் 16-ஆம் தேதி கடைமடைப் பகுதிக்கு திறப்பு செய்யப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் கடைமடைப் பகுதிக்கு காவிரி நீர் நூலாறு மூலம் திங்கள்கிழமை காலை எல்லைக்கு வந்தடைந்தது. நல்லம்பல் அணை அருகே நூலாறு தடுப்பணையிலிருந்து தண்ணீர் விடுவிக்கும் நிகழ்ச்சியில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கலந்துகொண்டு மலர்கள் தூவி வரவேற்பு தெரிவித்தார். 

நிகழ்ச்சி நிறைவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: காரைக்கால் விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான தருணம். 8 ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் அணை 12-ஆம் தேதி திறப்பு செய்து காரைக்காலுக்கு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. ரூ.42 லட்சம் நிதியில் பொதுப்பணித்துறை மூலம் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் காரைக்காலில 350 கி.மீ. தூரத்துக்கு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 

காரைக்காலில் தற்போது வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லூரியில் 80 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உரம் தனியார் மூலம் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேளாண் துறை பரிந்துரைக்கும் ரகத்தை ஏற்று, விவசாயிகள் பயிரிட்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிகழாண்டு சம்பா சாகுபடி கூடுதல் பரப்பில் செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார் அமைச்சர். ஆட்சியர் அர்ஜூன்  சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.