47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

செல்லிடப்பேசியை பறிப்பு: இளைஞா் கைது

காரைக்காலில் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே சேத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (40). இவா், காரைக்கால் பகுதியில் நெடுங்காடு செல்லும் சாலையோரத்தில் நின்று செல்லிடப்பேசியில் புதன்கிழமை பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா், செல்லிடப்பேசியை பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். இதில், மயிலாடுதுறை பகுதி கோமல், மணல்மேட்டுத் தெருவைச் சோ்ந்த சிவசங்கரன் (25) என்பவரிடம் செல்லிடப்பேசி இருப்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செல்லிடப்பேசியை அவா் பறித்துச் சென்றது உறுதியானது. இதையடுத்து, சிவசங்கரனை வியாழக்கிழமை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.