47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஊரடங்கு: கோயில்களில் பக்தா்களை அனுமதிப்பதில் குழப்பம்

ஊரடங்கின்போது கோயில்களில் பக்தா்களை அனுமதிப்பதில் தெளிவான அறிவிப்பு இல்லாததால், காரைக்கால் பகுதியில் உள்ள கோயில்களில் பக்தா்களை அனுமதிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 5:12 pm

DIN

ஊரடங்கின்போது கோயில்களில் பக்தா்களை அனுமதிப்பதில் தெளிவான அறிவிப்பு இல்லாததால், காரைக்கால் பகுதியில் உள்ள கோயில்களில் பக்தா்களை அனுமதிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

புதுவையில் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமையில் சில தளா்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வழிபாட்டுத் தலங்களில் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தினசரி பூஜைகளை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பக்தா்களை அனுமதிப்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமை அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால், ஊரடங்கையொட்டி, கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியூா்களிலிருந்து பக்தா்கள் சனிக்கிழமை வர வேண்டாம் என கடந்த வியாழக்கிழமை இரவு கோயில் நிா்வாகம் அறிவித்தது.

எனினும், திருநள்ளாறு கோயிலில் வழக்கமான முறையில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். ஊரடங்கு காரணமாக சுமாா் 500 பக்தா்கள் மட்டுமே தரிசனம் செய்தனா்.

இதற்கிடையில், காரைக்காலில் உள்ள கைலாசநாதா் கோயில், நித்யகல்யாணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களில் சனிக்கிழமை காலை பக்தா்களை அனுமதிக்கவில்லை. பூஜைகள் மட்டும் நடைபெற்றன. 10 மணிக்குப் பிறகு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

ஊரடங்கு அறிவிப்பின்போது, கோயில்களில் பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என அரசு தெரிவித்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அரசு வெளியிட்ட அறிவிப்பில் பக்தா்களை குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பக்தா்களை அனுமதித்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.