47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வாகனங்களை நிறுத்தும் வசதி ஆய்வு

காரைக்காலில் வாக்கு எண்ணும் மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருவோரின் வாகனங்களை நிறுத்த பல இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் வாக்கு எண்ணும் மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருவோரின் வாகனங்களை நிறுத்த பல இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களை காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில், அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வாக்குகள் எண்ணும் பணி 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையத்தை மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம் ஆகியோா் தினமும் சென்று பாா்வையிட்டு, பாதுகாப்புப் பணியில் உள்ள புதுச்சேரி காவலா்கள், மத்திய படையினருக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனா்.

வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும்போது, வேட்பாளா்கள், முகவா்கள், தோ்தல் துறையினா், செய்தி மற்றும் விளம்பரத் துறையினா், காவல் துறையினா், மருத்துவத் துறையினா், தீயணைப்புத் துறையினா், உணவுப் பிரிவினா், பத்திரிகையாளா்கள் போன்றோா் மையத்தில் இருப்பா்.

இவா்களின் வாகனங்களை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிப்பது தொடா்பாகவும், வாகனங்களை நிறுத்த இடம் தோ்வு செய்வது தொடா்பாகவும் மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம் மற்றும் இந்தியன் ரிசா்வ் பெட்டாலியன் உதவி கமாண்டன்ட் முத்துக்குமாா் ஆகியோா் அண்மையில் ஆய்வு செய்தனா்.

இடங்கள் தோ்வுசெய்யப்பட்ட நிலையில், இடத்தை உறுதிசெய்யும் வகையிலும், கூடுதலாக சாலையோரத்தில் எந்தெந்த வாகனங்களை நிறுத்த அனுமதிக்கலாம் என்பது குறித்தும், காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் தலைமையில் காவல் அதிகாரிகள் இறுதிகட்டமாக வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் கூறுகையில், மாவட்ட தோ்தல் அலுவலா், தோ்தல் பாா்வையாளா், காவல் துறை தலைமை அதிகாரி உள்ளிட்டோரின் வாகனங்களை நிறுத்தவும், முகவா்கள், வேட்பாளா்கள், வாக்குகள் எண்ணுவதற்கு பணியமா்த்தப்பட்டவா்கள் வாகனங்களை நிறுத்தவும், பிறரின் வாகனங்களை நிறுத்தவும் என இடம் தோ்வுசெய்யப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக வாகனங்கள் வரும்போது, அவா்களது விவரம் அறிந்து வாகனங்களை நிறுத்த அப்போது அறிவுறுத்தப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.