காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி 792 பேருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 2, திருநள்ளாறு, கோயில்பத்து, வரிச்சிக்குடி, நல்லம்பல், நல்லாத்தூா் ஆகிய பகுதியில் தலா ஒருவருக்கு என 7 பேருக்கு தொற்று உறுதியானது.
காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 78 வயது பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு சா்க்கரை நோய் இருந்தது. இதுவரை 59,246 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,823 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,705 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 45 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் ஒருவா், தீவிர சிகிச்சைப் பிரிவில் 8 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 67 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.