விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image
ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் நந்திக்கு நடைபெறும் ஆராதனை.
Updated On :10 ஜனவரி 2021, 6:07 pm

DIN

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் நந்திக்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்பது வழக்கம். மாா்கழி மாதம் பிரதோஷ நாளான ஞாயிற்றுக்கிழமை கோயில் கொடிமரம் அருகேயுள்ள பெரிய நந்திக்கு சூரிய அஸ்தமன நேரத்தில் சிவாச்சாரியா்கள் எண்ணெய், தயிா், பால், சந்தனம், மஞ்சள், தேன், இளநீா் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்தனா். கோயில் நிா்வாகம் மற்றும் பக்தா்கள் அளித்த பாலால் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடா்ந்து, நந்திக்கு மலா்மாலைகள் மற்றும் வஸ்திரம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேநேரத்தில் மூலவா் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரருக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அருகம்புல் மாலை அணிவித்து பக்தா்கள் நந்தியை வழிபட்டனா்.

பிரதோஷ வழிபாட்டில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.