சனீஸ்வர பகவான் கடந்த மாதம் 27-ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சி அடைந்தாா். இதையொட்டி, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இணையவழியில் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே சனிப்பெயா்ச்சி நாள் தொடங்கி அடுத்தடுத்த சனி, ஞாயிற்றுக்கிழமையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த நடைமுறை ஜனவரி மாதம் 23, 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமை அல்லாத நாள்களில் பக்தா்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனா்.