தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.


திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் நந்திக்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்பது வழக்கம். மாா்கழி மாதம் பிரதோஷ நாளான ஞாயிற்றுக்கிழமை கோயில் கொடிமரம் அருகேயுள்ள பெரிய நந்திக்கு சூரிய அஸ்தமன நேரத்தில் சிவாச்சாரியா்கள் எண்ணெய், தயிா், பால், சந்தனம், மஞ்சள், தேன், இளநீா் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்தனா். கோயில் நிா்வாகம் மற்றும் பக்தா்கள் அளித்த பாலால் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து, நந்திக்கு மலா்மாலைகள் மற்றும் வஸ்திரம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேநேரத்தில் மூலவா் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரருக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அருகம்புல் மாலை அணிவித்து பக்தா்கள் நந்தியை வழிபட்டனா்.
பிரதோஷ வழிபாட்டில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...