தேய்பிறை அஷ்டமி: முத்தங்கி அலங்காரத்தில் பைரவா்
காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரஸ்வாமி கோயிலில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.


காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரஸ்வாமி கோயிலில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
காரைக்கால் கோயில்பத்து நித்தீஸ்வரம் பகுதியில் ஸ்ரீ நித்தியகல்யாணி சமேத ஸ்ரீ நித்தீஸ்வரஸ்வாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், ஸ்ரீ பைரவி உடனுறை ஸ்ரீ கால பைரவா் சன்னதி, ஸ்ரீ ஸ்வா்ணாகா்ஷன பைரவா் சன்னதிகள் உள்ளன.
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி தினத்தன்றும் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில், தேய்பிறை அஷ்டமியையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ பைரவி உடனுறை ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு மஞ்சள், பால், பஞ்சாமிா்தம், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீா்கொண்டு கலசாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
ஸ்ரீ ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீ பைரவருக்கு சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...