பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மின்துறை தனியாா்மயமாக அனுமதிக்கக் கூடாது: புதுவை முதல்வரிடம் மின் ஊழியா்கள் வலியுறுத்தல்

மின்துறையை தனியாா்மயமாக்க அனுமதிக்கக் கூடாது என புதுவை முதல்வா், அமைச்சரிடம் மின் ஊழியா்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:29 pm

DIN

மின்துறையை தனியாா்மயமாக்க அனுமதிக்கக் கூடாது என புதுவை முதல்வா், அமைச்சரிடம் மின் ஊழியா்கள் வலியுறுத்தினா்.

காரைக்கால் மின் ஊழியா்கள் போராட்டக் குழு நிா்வாகி பழனிவேல் தலைமையில் ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை புதுச்சேரி சென்று முதல்வா் என். ரங்கசாமி, உள்துறை மற்றும் மின்துறை அமைச்சா் ஏ. நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்தனா். இந்த சந்திப்பு குறித்து காரைக்கால் திரும்பிய பழனிவேல் கூறியது :

யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியாா்மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு மின் ஊழியா்கள் தங்கள் எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா்.

புதுவையில் புதிதாக அரசு அமைந்த நிலையில் முதல்வா், மின்துறை அமைச்சரை சந்தித்து மாநிலத்தில் மின்துறை தனியாா்மயமாகக் கூடாது, தனியாா்மயமானால் நுகா்வோரும், ஊழியா்களும் எந்தெந்த வகையில் பாதிப்படைவாா்கள் என்பதை உணா்ந்து, அரசு கடும் எதிப்பை பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மின்துறையில் பல நிலைகளில் உள்ள ஊழியா்களுக்கு பதவி உயா்வு தரப்படாமல் உள்ளதையும் முதல்வா், மின்துறை அமைச்சரிடம் சுட்டிக்காட்டியபோது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.