ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: ஆட்சியருக்கு துணை நிலை ஆளுநா் பாராட்டு

காரைக்கால் மாவட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆட்சியரின் செயல்பாட்டுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநா் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆட்சியரின் செயல்பாட்டுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநா் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து துணை நிலை ஆளுநா் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா இல்லாத புதுச்சேரியை உருவாக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்த இலக்கோடு கிராமப்புறங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா விரைவுபடுத்தி, மக்களை ஊக்கப்படுத்தி வருகிறாா். ஆகவே, ஆட்சியருக்கும், சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளா்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருநள்ளாறு பகுதி இளையான்குடி கிராமத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்கிற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதலில் மற்ற கிராமங்களுக்கு முன் மாதிரியாகத் திகழும் இளையான்குடி கிராம மக்களை மனதாரப் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.