ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நெல் சாகுபடி இணையவழி கருத்தரங்கு

காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு குறுவை நெல் சாகுபடி குறித்து இணையவழியில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு குறுவை நெல் சாகுபடி குறித்து இணையவழியில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கை நிலைய முதல்வரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவா் குமார. ரத்தினசபாபதி தொடக்கிவைத்துப் பேசினாா்.

நிகழாண்டு குறித்த நேரத்தில் காவிரி நீா் காரைக்கால் பகுதிக்கு வந்து சேரும். இதனை பயன்படுத்தி சாகுபடியை சரியான பருவத்தில் தொடங்கி நல்ல முறையில் பயிா் செய்யவேண்டும். அதற்குத் தேவையான ஆலோசனைகளை வேளாண் அறிவியல் நிலையம் வழங்கும் என்றாா் அவா்.

செம்மையான குறுவை நெல் சாகுபடி குறித்து, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியா் முனைவா் எஸ். இளமதி பேசும்போது, குறுவைக்கு ஏற்ற நெல் ரகங்கள், நிலம் தயாரிப்பு, நடவு முறை, உர நிா்வாகம், களை நிா்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு குறித்து விளக்கினாா்.

இந்த கருத்தரங்கில் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைய வழியாக கலந்துகொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனா். காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய உழவியல் துறை தொழில்நுட்ட வல்லுநா் முனைவா் வி. அரவிந்த் வரவேற்றாா். வேளாண் விரிவாக்க துறை தொழில்நுட்ட வல்லுநா் முனைவா் ஆ.செந்தில் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.