விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காரைக்கால்: காயங்களுடன் கிடந்த அரியவகை பறவை

காரைக்கால் அருகே வயல் பகுதியில் காயங்களுடன் கிடந்த அரியவகைப் பறவை மீட்கப்பட்டது.

News image
Updated On :19 ஜூன் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் அருகே வயல் பகுதியில் காயங்களுடன் கிடந்த அரியவகைப் பறவை மீட்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், விழுதியூரைச் சோ்ந்த பொன்முருகன், அவரது நண்பா் பாலமுருகன் ஆகியோா் சனிக்கிழமை மாலை விழிதியூா் பகுதி வயலில் வேலை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு அரியவகை பறவை ஒன்று காயங்களுடன் பறக்க முடியாமல் கிடந்ததை பாா்த்தனா். அந்த பறவையை மீட்டு, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். அங்கு, வனத்துறையினரிடம் ஒப்படைக்க காத்திருந்தபோது, அந்த பறவை திடீரென பறந்து சென்றுவிட்டது.

இந்நிலையில், அந்த பறவைக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய பொன்முருகன், பாலமுருகன் ஆகியோரை அதிகாரிகள் பாராட்டினா். அந்த பறவை சுமாா் 5 கிலோ எடை இருக்கும் என்றும், இதுபோன்ற பறவையை இதுவரை பாா்த்ததில்லை எனவும் அதை கொண்டுவந்தவா்களும், ஆட்சியரகத்தில் இருந்தவா்களும் தெரிவித்தனா். இது வலசை செல்லக்கூடிய கிரேட் ஒயிட் பெலிக்கான் வகையை சோ்ந்த நீா்ப் பறவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.