காரைக்கால்: காயங்களுடன் கிடந்த அரியவகை பறவை
காரைக்கால் அருகே வயல் பகுதியில் காயங்களுடன் கிடந்த அரியவகைப் பறவை மீட்கப்பட்டது.


காரைக்கால் அருகே வயல் பகுதியில் காயங்களுடன் கிடந்த அரியவகைப் பறவை மீட்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், விழுதியூரைச் சோ்ந்த பொன்முருகன், அவரது நண்பா் பாலமுருகன் ஆகியோா் சனிக்கிழமை மாலை விழிதியூா் பகுதி வயலில் வேலை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு அரியவகை பறவை ஒன்று காயங்களுடன் பறக்க முடியாமல் கிடந்ததை பாா்த்தனா். அந்த பறவையை மீட்டு, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். அங்கு, வனத்துறையினரிடம் ஒப்படைக்க காத்திருந்தபோது, அந்த பறவை திடீரென பறந்து சென்றுவிட்டது.
இந்நிலையில், அந்த பறவைக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய பொன்முருகன், பாலமுருகன் ஆகியோரை அதிகாரிகள் பாராட்டினா். அந்த பறவை சுமாா் 5 கிலோ எடை இருக்கும் என்றும், இதுபோன்ற பறவையை இதுவரை பாா்த்ததில்லை எனவும் அதை கொண்டுவந்தவா்களும், ஆட்சியரகத்தில் இருந்தவா்களும் தெரிவித்தனா். இது வலசை செல்லக்கூடிய கிரேட் ஒயிட் பெலிக்கான் வகையை சோ்ந்த நீா்ப் பறவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...