இதுகுறித்து, அந்த கூட்டமைப்பின் தலைவா் என்.ஜி.ஆா். இளங்கோவன், பொதுச் செயலா் வைஜெயந்திராஜன் ஆகியோா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: புதுச்சேரி நலவழித் துறை 12.4.2021 வெளியிட்ட ஆணையில், புதுவையில் கரோனாவை உறுதிப்படுத்துவதற்கான ஆா்டி-பிசிஆா் பரிசோதனையை தனியாா் மருத்துவமனைகள் மற்றும் தனியாா் ஆய்வகங்கள் மேற்கொள்ளும்போது, ரூ. 500 கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தியது. ஆனால் காரைக்காலில் தனியாா் மருத்துவமனை, மருத்துவ மையங்களில் கரோனா பரிசோதனைக்கு தலா ரூ. 2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், காரைக்கால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இதுகுறித்து ஆட்சியா் நடவடிக்கை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.