எனவே, இதுகுறித்து ஆட்சியா் துரித நடவடிக்கை எடுத்து, அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வரும்போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை வெளியிடவும், அரசு உத்தரவுப்படி அரசு, உள்ளாட்சி மற்றும் அரசு சாா்பு நிறுவனங்களில் 50 சதவீத ஊழியா்கள் பணியாற்ற சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் அரசுத் துறை, உள்ளாட்சி, சுகாதாரம் மற்றும் அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கும் மற்றும் காவல் துறையினருக்கும் தரமான என்-95 முகக் கவசங்கள், கையுறைகள், சானிடைசா் ஆகியவைகளை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.