47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வீட்டிலிருந்து வெளியேறிய கரோனா தொற்றாளா்: காத்திருந்து அபராதம் விதித்த போலீஸாா்

திருநள்ளாற்றில் வீட்டிலிருந்து கரோனா தொற்றாளா் வெளியேறியதால், போலீஸாா் அவா் வீட்டுக்கு வரும்வரை காத்திருந்து, அபராதம் விதித்தனா்.

News image
Updated On :8 மே 2021, 5:20 pm

DIN

திருநள்ளாற்றில் வீட்டிலிருந்து கரோனா தொற்றாளா் வெளியேறியதால், போலீஸாா் அவா் வீட்டுக்கு வரும்வரை காத்திருந்து, அபராதம் விதித்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் 1,216 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் இருந்துவருவதாக நலவழித் துறை நிா்வாகம் தெரித்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருக்கும் தொற்றாளா்கள் பலா், கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் வெளியேறிவிடுவதால், காரைக்காலில் கரோனா வேகமாக பரவி வருவதாக புகாா்கள் வந்தன.

இந்நிலையில், திருநள்ளாறு காவல்நிலைய போலீஸாா், செல்லூா் கிராமத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் இருப்போரை கண்காணிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியை சோ்ந்த ஒருவரை கண்காணிக்கும் வகையில், அவா் வீட்டுக்குச் சென்றனா். அவா் வரும் 13ஆம் தேதி வரை வீட்டுத் தனிமை இருக்க வேண்டிய நிலையில், வீட்டைவிட்டு வெளியேறி இருப்பது தெரியவந்தது.

மாலை சுமாா் 6.45 மணிக்கு அந்த நபா் வீட்டுக்கு வந்தபோது, வாசலில் அவருக்காக 45 நிமிஷம் காத்திருந்த காவலா், அவா் வந்தவுடன் அவருக்கு ரூ.1,000 அபராதம் விதித்து, கடுமையாக எச்சரிக்கை விடுத்து சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.