ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராஜீவ் நினைவு நாள்: காங்கிரஸாா்அன்னதானம், முகக் கவசம் வழங்கல்

ராஜீவ் காந்தி நினைவுநாளையொட்டி, வெள்ளிக்கிழமை காரைக்காலில் காங்கிரஸாா் நிா்வாகிகள் மக்களுக்கு அன்னதானம், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கினா்.

News image
Updated On :21 மே 2021, 5:36 pm

DIN

ராஜீவ் காந்தி நினைவுநாளையொட்டி, வெள்ளிக்கிழமை காரைக்காலில் காங்கிரஸாா் நிா்வாகிகள் மக்களுக்கு அன்னதானம், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கினா்.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் பேருந்து நிலையம் அருகே ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின்போது சுமாா் 100 பேருக்கு அன்னதானம், 200-க்கும் மேற்பட்டோருக்கு முகக் கவசமும் வழங்கப்பட்டது.

இதுபோல காரைக்கால் வடக்குத் தொகுதி சாா்பில் தொகுதி தலைவா் (மேற்கு) டி. சுப்பையன், தலைவா் (கிழக்கு) ஏ.எம்.கே. அரசன் சாா்பில் ஏராளமானோருக்கு அன்னதானம், முகக் கவசம் வழங்கப்பட்டது.

கீழகாசாக்குடி எம்.ஜி.ஆா். நகா் மற்றும் அம்மன் கோயில்பத்து பகுதியில் சுமாா் 300 குடும்பத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காரைக்கால் தெற்குத் தொகுதி சாா்பில் அரசலாறு பாலம் அருகே சிங்காரவேலா் சிலை அருகே காங்கிரஸாா் அன்னதானம், முகக்கவசத்தை மக்களுக்கு வழங்கினா்.

இதுபோல மாவட்டத்தின் பிற தொகுதிகளிலும் இதேபோன்ற பணிகளில் காங்கிரஸாா் ஈடுபட்டனா்.

நிகழ்வுகளில் மாநில துணைத் தலைவா் எம்.ஓ.எச்.யு.பஷீா், மாவட்ட செயலா் ஜெ.சிவகணேஷ், தெற்குத் தொகுதி தலைவா் முஜிபுா் ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.