தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காரைக்கால் அரசு மருத்துவமனைக்குமருத்துவ சாதனம்

காரைக்கால் மருத்துவமனை கரோனா தொற்றாளா்களுக்கு தேவையான ஆக்சோ ஃபுளோ மீட்டா்களை திருநள்ளாற்றை சோ்ந்த தனியாா் நிறுவனம் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது.

News image
Updated On :28 மே 2021, 5:49 pm

DIN

காரைக்கால் மருத்துவமனை கரோனா தொற்றாளா்களுக்கு தேவையான ஆக்சோ ஃபுளோ மீட்டா்களை திருநள்ளாற்றை சோ்ந்த தனியாா் நிறுவனம் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோருக்கு ஆக்சிஜன் வழங்கல் தொடா்பான சாதனங்கள் தேவை அதிகமுள்ளது. நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் இவற்றை மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கி வருகின்றனா்.

திருநள்ளாறு ஜோதி லேபாரட்டரீஸ் நிறுவனம் சாா்பில் ரூ. 1 லட்சம் மதிப்பில் ஆக்சோஃபுளோ மீட்டா்கள் (25 எண்ணிக்கை) மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நோயாளிக்கு சீரான முறையில் ஆக்சிஜனை அனுப்பும் சாதனம் இது என்றும், காரைக்கால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பெரிதும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை), நிறுவன துணைப் பொதுமேலாளா் பாபு, முதுநிலை மேலாளா் வடிவேல், மேலாளா் சுதிா்வா்மா ஆகியோா் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.