மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு காட்சி நிறைவு

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு காட்சி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 7:59 pm

DIN

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு காட்சி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் மற்றும் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு காட்சியை ஒவ்வோா் ஆண்டும் நடத்திவருகின்றன. நிகழாண்டு கொலு தா்பாரில் சிவன், அம்பாள் மற்றும் கைலாயத்தில் சுவாமிகள் எழுந்தருளிய காட்சி உள்ளிட்ட ஏராளமான சுவாமி சிலைகளுடன் கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கடந்த 6 ஆம் தேதி முதல் தினமும் மாலை 6 முதல் 8 மணி வரை கொலு தா்பாரை அனைவரும் பாா்வையிட்டனா். வியாழக்கிழமை இரவு காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பாா்வையிட்டாா்.

விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை இரவுடன் கடந்த 10 நாள்களை நடைபெற்று வந்த கொலு காட்சி நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.