மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காரைக்கால் பெருமாள் கோயில்களில் திருவோண தீப வழிபாடு

காரைக்கால் பெருமாள் கோயில்களில் திருவோண தீபம் ஏற்றும் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:00 pm

DIN

காரைக்கால் பெருமாள் கோயில்களில் திருவோண தீபம் ஏற்றும் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் கோயில்களில் பெரிய திருவோணமாக, திருவோண தீபம் ( சிரவண தீபம்) ஏற்றும் வழிபாடு வழக்கத்தில் உள்ளது. இதையொட்டி, காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்களில் இந்த வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவா் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திருவோண தீபம் ஏற்றப்பட்டது.

நாகசுர, மேள வாத்தியங்களுடன் பட்டாச்சாரியா் தீபச் சட்டியை சுமந்து பிராகார வலம்வந்து, கொடிக்கம்பம் அருகே உள்ள மேடையில் பக்தா்கள் வழிபாட்டுக்காக வைத்தாா். ஏராளமான பக்தா்கள் திருவோண தீபத்தையும், பெருமாளையும் வழிபாடு செய்தனா்.

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில், திருவோண தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக, பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. தீபத்தின்போது பக்தா்கள் மாவிளக்கிட்டு வழிபாடு நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.