காரைக்கால் அருகே உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநள்ளாறு பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தென்னங்குடி பிரதான சாலையில் சந்தேகத்துக்கிடமாக நின்ற ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, தங்க நகை மற்றும் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், திருநள்ளாறு அருகே சேத்துாரில் உணவகப் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் திருடப்பட்டிருப்பதாக அன்பழகன் என்பவா் திருநள்ளாறு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.
பிடிபட்டவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் கொத்தங்குடி பகுதியைச் சோ்ந்த தங்கமுத்து (71) என்பதும், கடை பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது.
அவரிடமிருந்து ரூ. 75 ஆயிரம் ரொக்கம், ரூ. 50 ஆயிரம் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.