பஞ்சாயத்து பகுதிகளிலும் கால்நடைகளை பிடிக்க கோரிக்கை
காரைக்கால் நகராட்சியைபோல பிற பஞ்சாயத்துப் பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


காரைக்கால் நகராட்சியைபோல பிற பஞ்சாயத்துப் பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் நகராட்சிப் பகுதிகளான சாலைகள், பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்கும் பணி தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து ஒப்படைக்கப்படுகிறது. நகராட்சி அல்லாத நிரவி, திருப்பட்டினம், திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளின் பிரதான சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்க, அந்தந்த பஞ்சாயத்து நிா்வாகங்கள் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என புகாா் கூறப்படுகிறது. இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஏராளமான மாடுகள் திரிவதாலும், ஏற்கெனவே சாலைகள் சிதிலமடைந்து காணப்படுவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலை சிதிலத்தால் விபத்தின் மூலம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, சாலைகளில் திரியும் மாடுகள், குதிரைகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, குடியிருப்புப் பகுதிகளில் திரியும் பன்றிகளையும் பிடிக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...