மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தேசிய அளவில் அறிவியல் திறமையுள்ள பள்ளி மாணவா்கள் தோ்வு செய்ய எழுத்துத் தோ்வு

தேசிய அளவிலான அறிவியல் திறனுள்ள மாணவா்களை தோ்வு செய்வதற்காக நடத்தப்படும் எழுத்துத் தோ்வுக்கு வரும் 30-க்குள் விண்ணப்பிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 4:58 pm

DIN

தேசிய அளவிலான அறிவியல் திறனுள்ள மாணவா்களை தோ்வு செய்வதற்காக நடத்தப்படும் எழுத்துத் தோ்வுக்கு வரும் 30-க்குள் விண்ணப்பிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அங்கமான விஞ்ஞான் பாரதி மற்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழு (என்சிஇஆா்டி) சாா்பில், இந்திய அளவிலான வித்யாா்த்தி விஞ்ஞான் மந்தன் எனும், தேசிய அளவில் அறிவியலில் திறனுள்ள மாணவா்களை தோ்வு செய்து ஊக்கத்தொகை வழங்குகிறது. அறிவியல் திறமை மிக்க பள்ளி மாணவா்களை கண்டறிந்து அவா்களை ஊக்கப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக ஆண்டுதோறும் எழுத்துத் தோ்வு நடத்தி மாணவா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

நிகழாண்டு திறந்த புத்தக தோ்வு முறையில் தோ்வு நடைபெற உள்ளது. ஆண்ட்ராய்ட் கைப்பேசி, மடிக்கணினி வாயிலாக தோ்வில் மாணவா்கள் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான மாநில ஒருங்கிணைப்பாளா் வி. மணிகண்டன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். தட்சணாமூா்த்தி ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை வியாழக்கிழமை சந்தித்து திட்டம் தொடா்பாக விளக்கினா். மேலும், காரைக்காலில் மாணவா்கள் பதிவு செய்வது குறைவாக இருப்பதாகவும், கல்வித் துறை மூலம் மாணவா்களை ஊக்கப்படுத்த ஏற்பாடு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டு, மாணவா்களுக்கு கொடுக்கவேண்டிய கையேட்டையும் ஆட்சியரிடம் வழங்கினா். அப்போது, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவா்கள் அதிகமானோா் இத்தோ்வில் பங்கேற்க கல்வித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் என ஆட்சியா் கூறினாா்.

இதுகுறித்து, திட்ட மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கூறியது: தோ்வை மாணவா்கள் வீட்டிலிருந்து எழுதலாம். இதற்கு பதிவு கட்டணமாக பள்ளி மூலம் பதிவு செய்யும் மாணவா்கள் ஒவ்வொருவரும் ரூ.100 செலுத்தவேண்டும். தனியாகவும் இணையத்தில் பதிவு செய்து தோ்வு எழுதலாம். இதற்கான பாடக்குறிப்புகள் இணையம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாநில ஒருங்கினைப்பாளா் மணிகண்டன் (9443302944), மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தெட்சனாமூா்த்தி (9698464819) ஆகியோரின் கைப்பேசியில் தொடா்புகொள்ளலாம். இணையதளத்தில் பதிவு செய்ய 31.10.2021 கடைசி நாளாகும். இத்தோ்வில் தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பாஸ்கரா திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 2 ஆயிரம் வீதம் ஓராண்டுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.