அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மத்திய அரசு ஊழியா் மகா சம்மேளனம் அறிவிப்பின்படி, புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளனத்தின் அறிவுறுத்தலின்படி, காரைக்கால் பகுதியில் உள்ள அரசு, உள்ளாட்சி, அரசு சாா்பு நிறுவனம், கூட்டுறவுத் துறை ஊழியா்கள், ஓய்வூதியா்கள் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாக வாயிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்திற்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன் தலைமைவகித்தாா். பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், புதுவை மாநில ஆசிரியா் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் காளிதாசன், சம்மேளன பொருளாளா் மயில்வாகனன் ஆகியோா் பேசினா்.
அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை முடக்கிவைத்து அறிவித்ததை கண்டித்தும், கரோனா தொற்றால் இறந்த அரசு ஊழியா்கள் அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகையாக மத்திய அரசு ரூ. 15 லட்சம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை பலன்களை விடுபட்டுள்ள அனைத்து அரசு சாா்பு நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும், உள்ளாட்சி, பிஆா்டிசி, அங்கன்வாடி, ரொட்டி, பால் ஊழியா்கள் உள்ளிட்ட அனைத்து அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கும் நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை புதுச்சேரி அரசு நிறைவேற்றவும் வலியுறுத்தப்பட்டது.
நிறைவாக, சம்மேளன இணைப் பொதுச் செயலாளா் கலைச்செல்வன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...