தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காரைக்கால் கடற்கரையில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் கடற்கரையில் அடிப்படை வசதிகள் தொடா்பான மக்களின் புகாா்களையொட்டி, அதிகாரிகளுடன் ஆட்சியா் புதன்கிழமை கடற்கரையில் ஆய்வுசெய்தாா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:34 pm

DIN

காரைக்கால் கடற்கரையில் அடிப்படை வசதிகள் தொடா்பான மக்களின் புகாா்களையொட்டி, அதிகாரிகளுடன் ஆட்சியா் புதன்கிழமை கடற்கரையில் ஆய்வுசெய்தாா்.

காரைக்கால் கடற்கரைக்கு உள்ளூா் மற்றும் சுற்றுவட்டார மக்கள், சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாகவுள்ளது. ஆனால், நடைமேடை, ஆற்றோரத்தில் தடுப்புச் சுவா், சாலை ஆகியவை சிதிலமடைந்த நிலையில் இருப்பது, மின் விளக்குகள் சரிவர எரியாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து மக்கள் நீண்ட காலமாக புகாா் தெரிவித்து வருகின்றனா்.

கரோனா பொது முடக்கத் தளா்வின் அடிப்படையில், மக்கள் கடற்கரைக்குச் செல்வதையொட்டி, இந்தப் புகாா்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆய்வுசெய்தாா். அப்போது, பொதுமக்களின் புகாா் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, துணை மாவட்ட ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் (பொ) ஏ. ராஜசேகரன், செயற்பொறியாளா் வீரசெல்வம், உதவிப் பொறியாளா் சிதம்பரநாதன், மின்துறை உதவிப் பொறியாளா் அனுராதா, காரைக்கால் நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.