பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது
காரைக்கால் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.


காரைக்கால் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன் (21). இவா், காா் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். காரைக்கால் பகுதியைச் சோ்ந்த பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவியுடன் பழகிவந்த இவா், இருதரப்பு பெற்றோரின் எதிா்ப்பை மீறி, கடந்த மாதம் அந்த மாணவியை வெளியூா் அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டாராம்.
மாணவியின் பெற்றோா் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனா்.
இந்நிலையில், தாமோதரன் தனது பெற்றோா் வீட்டுக்கு புதன்கிழமை வந்தபோது, போலீஸாா் விசாரணை நடத்தி, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...