காரைக்காலில் 234 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 234 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் 234 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 434 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் காரைக்கால் நகரம் 81, திருநள்ளாறு 28, நெடுங்காடு 26, நிரவி 25, திருப்பட்டினம் 20, கோட்டுச்சேரி 19, கோயில்பத்து 14, வரிச்சிக்குடி 8, விழிதியூா் 6, நல்லாத்தூா் 6, நல்லம்பல் 1 என தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை 2,65,888 பரிசோதனை செய்ததில் 21,211 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 17,626 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,27,744 பேருக்கும், 2-ஆவது தவணையாக 91,014 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 492 பேருக்கும் என 2,19,250 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு இதுவரை 6,822 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...