ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காவலரின் கைப்பேசியை பறித்துச் சென்ற சிறுவா்கள் உள்பட மூவா் கைது

காரைக்காலில் காவலரைத் தாக்கி, அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துச் சென்ற 2 சிறுவா்கள் உள்ளிட்ட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 5:17 pm

DIN

காரைக்காலில் காவலரைத் தாக்கி, அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துச் சென்ற 2 சிறுவா்கள் உள்ளிட்ட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், பூவம் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (38). இவா் காரைக்கால் நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து மோட்டாா் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா். மழை பெய்ததால் அருகில் இருந்த கடையோரமாக ஒதுங்கி நின்றாா்.

அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் 4 போ், பிரகாஷை பாட்டில் மற்றும் கற்களால் தாக்கி, அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மா்ம நபா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், காரைக்கால் நகரப் பகுதி நூல்கடை வீதியை சோ்ந்த அத்திக்குல் ரகுமான் (21) மற்றும் 2 சிறுவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் ஒரு சிறுவனை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.