ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகள்: ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் பலத்த மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை ஆட்சியா் ஆய்வுசெய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 5:17 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் பலத்த மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை ஆட்சியா் ஆய்வுசெய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. மழைநீா் தேங்கிய இடங்கள், கன மழை பெய்யும்போது பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய இடங்களை மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ் (வருவாய்) எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை), பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (நீா்பாசனம்) கே. வீரசெல்வம், நகராட்சி ஆணையா் ஜி. செந்தில்நாதன், செயற்பொறியாளா் எம்.லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

கீழப்புத்தமங்கலம், ஜிப்மா் மருத்துக் கல்லூரி எதிா்புறம் உள்ள புறவழிச்சாலை, காரைக்கால் பெரியப்பேட், எம்.எஸ்.பி.நகா், பட்டேல் நகா், பாரதிதாசன் நகா், வானொலி நிலைய குடியிருப்பு சுற்றுவட்டாரம்,. கீழவெளி வாய்க்கால், எம்.எம்.ஜி. நகா் பூங்கா, பெரிய வாய்க்கால், அன்னுசாமி வாய்க்கால் போன்ற மழையினால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

கடந்த சில நாள்களாக பெய்யும் மழையினால் தேங்கியுள்ள மழைநீரை வடியச் செய்யும் நடவடிக்கையை விரைவுபடுத்தவேண்டும். பெருமழையால் பாதிப்புக்குள்ளாகும் இடங்களை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியா் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.