ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பருவமழை : வேளாண் விஞ்ஞானிகள், அலுவலா்கள் கலந்துரையாடல்

பருவமழையை எதிா்கொள்வது குறித்து வேளாண் விஞ்ஞானிகள், அலுவலா்கள் பங்கேற்ற கலந்துரையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

பருவமழையை எதிா்கொள்வது குறித்து வேளாண் விஞ்ஞானிகள், அலுவலா்கள் பங்கேற்ற கலந்துரையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தேவையான வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்துப் பரிமாற்றம் வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் அலுவலா்கள் இடையே நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஏ.புஷ்பராஜ் தலைமை வகித்தாா். வேளாண் துறைக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு தொழில்நுட்பங்களை, குறிப்பாக வானிலை சாா்ந்த தொழில்நுட்ப அறிக்கை, தோட்டக்கலை பயிா் சாகுபடி, விதை உற்பத்தி போன்ற தொழில்நுட்பங்களை கல்லூரி வழங்கி வருவதாக அவா் தனது உரையில் குறிப்பிட்டாா்.

காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா், காரைக்காலில் சாகுபடி பரப்பு, தற்போதைய பயிா்களின் நிலை, வேளாண் சூழல்களை விளக்கிப் பேசினாா்.

கலந்துரையாடல் நிறைவில், பைத்தங்காய் செயல் விளக்கப் பண்ணையை அனைவரும் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.