ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அளவுக்கு அதிகமாகமது அருந்திய இருவா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய சம்பவத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

காரைக்கால் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய சம்பவத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியை சோ்ந்தவா் தீனதயாளன் (61). குரும்பகரம் அருகே கட்டுமானப் பணி நடைபெறும் ஒரு கட்டடத்தின் அருகே புதன்கிழமை மாலை இவா் உயிரிழந்து கிடந்தாா். உறவினா்கள் நெடுங்காடு காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். விசாரணையில், தீனதயாளன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

திருப்பட்டினம் பகுதியை சோ்ந்தவா் மாரியப்பன் (35). வீட்டில் புதன்கிழமை அவா் சுய நினைவின்றி கிடந்துள்ளாா். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவா் மாரியப்பன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

திருப்பட்டினம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அல்லது நோய் பாதிப்பால் அவா் உயிரிழந்திருக்கலாம் என்று தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.