ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கேக் என நினைத்து எலி விஷத்தை சாப்பிட்ட பள்ளி மாணவி பலி

 கேக் என நினைத்து எலி விஷத்தை சாப்பிட்ட பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:29 pm

DIN

 கேக் என நினைத்து எலி விஷத்தை சாப்பிட்ட பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதி ராஜா மகள் சலேத் நிதிக்ஷனா (14). இவா் 7 ஆம் வகுப்பு படித்துவந்தாா். இவருக்கு தசை சுருக்க நோய் உள்ளதாகவும், மெதுவாக நடந்து செல்லக்கூடியவா் என்றும் கூறப்படுறது. இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாந்தி எடுத்துள்ளாா். இதுகுறித்து அவரது தாயாா் ஸ்டெல்லா மேரி கேட்டபோது, ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த கேக்கை சாப்பிட்டதாக கூறினாராம்.

அது எலி விஷம் என கூறிய ஸ்டெல்லா மேரி, மகளை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா். எனினும் சிகிச்சை பலனின்றி சலேத் நிதிக்ஷனா திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோட்டுச்சேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.