வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கோதண்டராமா் கோயிலில் விடுப்பட்ட திருப்பணிகள் தொடக்கம்

காரைக்கால் கோதண்டராமா் பெருமாள் கோயிலில் விடுப்பட்ட திருப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

News image

கோயிலில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளை பாா்வையிடும் சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன்.

Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

காரைக்கால் கோதண்டராமா் பெருமாள் கோயிலில் விடுப்பட்ட திருப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ பாா்வதீஸ்வரா் தேவஸ்தானத்திற்குட்பட்டதாக கோதண்டராமா் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் உள்ளன. இதில், பாா்வதீஸ்வரா் கோயில், கோதண்டராமா் பெருமாள் கோயில், விநாயகா் கோயில், முனீஸ்வரன் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் குறிப்பிட்ட காலத்தில் குடமுழுக்கு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோதண்டராமா் பெருமாள் கோயிலில் விடுப்பட்ட பணிகளை தொடங்குவதற்காக பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் உள்ளிட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். பூஜை நிறைவில் எஞ்சிய திருப்பணிகளை தொடங்கும் விதமாக ஸ்பதியிடம் திருப்பணிக் குழுவினா் ரூ.2 லட்சத்தை வழங்கினா்.

பின்னா், கோயிலில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள திருப்பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் பாா்வையிட்டு, எஞ்சிய பணிகளை குறித்த காலத்தில் நிறைவு செய்து குடமுழுக்குக்கு ஏற்பாடு செய்யுமாறு அறங்காவல் வாரியத்தினா், திருப்பணிக் குழுவினரை கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.