காரைக்கால்: காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி செப்.22-ஆம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படாததால் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் பஞ்சாயத்தார்கள் கூறியது:
“காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் 200 விசைப்படகுகளும், 500 ஃபைபர் படகுகளும் கட்டப்படுகின்றன. இந்த துறைமுகம் அளவில் சிறியதாகும். இதனை விரிவாக்கம் செய்ய புதுவை அரசை நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த நிலையில், ரூ.22 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாகவும், பணிகள் தொடங்குமென தெரிவிக்கப்பட்டது. எனினும் பல ஆண்டுகளாக பணிகள் தொடங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு காரைக்கால் வந்த மத்திய மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகனும் மீன்பிடித்துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும், தேவையான உதவிகள் செய்யப்படும் என கூறினார். எந்தவொரு நபரின் அறிவிப்பும் நடைமுறைக்கு வரவில்லை.
எனவே வருகிற 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காரைக்கால் அரசலாறு பாலம் அருகே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம், ஆட்சியரகம் வரை பேரணி நடத்தப்படும். குறிப்பாக துறைமுக விரிவாக்கம் செய்யப்படுவதோடு, அரசலாறு முகத்துவாரம் ஆழப்படுத்தவேண்டும், மீனவ சமுதாயத்தினர் தற்போது இபிசி பிரிவில் உள்ளனர். முன்பை போல எம்பிசி பிரிவில் சேர்க்கவேண்டும். இதன் மூலமே உயர்கல்வி, வேலைவாய்ப்பு எளிதில் இருக்கும்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், காரைக்காலில் மீனவர்கள் தினமும் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, அனைத்து படகுகளையும் அரசலாற்றில் கட்டிவிடுவோம். புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

ஃபிஃபா உலகக் கோப்பை: முதல் அணியாக அடுத்த சுற்றுக்குத் தேர்வான மெக்சிகோ!

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது?
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



