தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கம் கோரி செப்.22-ல் போராட்டம்

காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி செப்.22-ஆம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

News image

காரைக்கால் மீனவர்கள் செப்.22-ல் போராட்டம்

Updated On :20 செப்டம்பர் 2023, 11:10 am IST

காரைக்கால்: காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி செப்.22-ஆம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படாததால் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின் பஞ்சாயத்தார்கள் கூறியது:

“காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் 200 விசைப்படகுகளும், 500 ஃபைபர் படகுகளும் கட்டப்படுகின்றன. இந்த துறைமுகம் அளவில் சிறியதாகும். இதனை விரிவாக்கம் செய்ய புதுவை அரசை நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த நிலையில், ரூ.22 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாகவும், பணிகள் தொடங்குமென தெரிவிக்கப்பட்டது. எனினும் பல ஆண்டுகளாக பணிகள் தொடங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு காரைக்கால் வந்த மத்திய மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகனும் மீன்பிடித்துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும், தேவையான உதவிகள் செய்யப்படும் என கூறினார். எந்தவொரு நபரின் அறிவிப்பும் நடைமுறைக்கு வரவில்லை.

எனவே வருகிற 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காரைக்கால் அரசலாறு பாலம் அருகே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம், ஆட்சியரகம் வரை  பேரணி நடத்தப்படும். குறிப்பாக துறைமுக விரிவாக்கம் செய்யப்படுவதோடு, அரசலாறு முகத்துவாரம் ஆழப்படுத்தவேண்டும், மீனவ சமுதாயத்தினர் தற்போது இபிசி பிரிவில் உள்ளனர். முன்பை போல எம்பிசி பிரிவில் சேர்க்கவேண்டும். இதன் மூலமே உயர்கல்வி, வேலைவாய்ப்பு எளிதில் இருக்கும்.

கோரிக்கைகள்  நிறைவேற்றப்படவில்லை என்றால், காரைக்காலில்  மீனவர்கள் தினமும் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, அனைத்து படகுகளையும் அரசலாற்றில் கட்டிவிடுவோம். புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.