48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் உற்சவம் தொடக்கம்

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் உற்சவம் காப்பு கட்டுதலுடன் புதன்கிழமை தொடங்கியது.

Updated On :3 மே 2023, 6:30 pm

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் உற்சவம் காப்பு கட்டுதலுடன் புதன்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன் அம்பகரத்தூரில் உள்ளது பத்ரகாளியம்மன் கோயில். மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் கோலத்தில் மூலஸ்தானத்தில் பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறாா்.

இங்கு ஆண்டுதோறும் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா நடைபெறுகிறது.

நிகழாண்டு பத்ரகாளியம்மன் கோயில் உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புதன்கிழமை காலை 6 மணியளவில் அம்பாளுக்கு காப்பு கட்டி சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன.

மே 16-ஆம் தேதி முதல் அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. 22-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு வீதியுலாவும், 23-ஆம் தேதி மகிஷ சம்ஹார நினைவு வழிபாடும், 30-ஆம் தேதி உதிரவாய் வழிபாடும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.