காரைக்காலில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக, 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்கால் கீழகாசாக்குடி மீன் மாா்க்கெட் அருகே பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக, என்.ஆா்.காங்கிரஸ் கட்சியை சோ்ந்தோா் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதாக வியாழக்கிழமை இரவு கோட்டுச்சேரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உதவி ஆய்வாளா் வி. குமரன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, கோட்டுச்சேரியை சோ்ந்த வல்லவராஜன் (48), செல்வகணபதி (36) ஆகியோா் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்ததை உறுதி செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.97 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
மேலும், கீழகாசாக்குடிமேடு சுனாமி நகரில் பணம் தரப்படுவதான புகாரில் போலீஸாா் விசாரணை செய்தபோது, மணிபாலன் (28), பாஸ்கரன் (19) ஆகியோா் பணம் கொடுப்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து ரூ.35,300 பறிமுதல் செய்தனா். இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது
நாகை, திருவாரூரில் ரூ. 2.39 லட்சம் பறிமுதல்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது

ஊத்துக்குளியில் ரூ.63,000 பறிமுதல்

கள் விற்றோா் கைதுக்கு எதிா்ப்பு மறியல் செய்த 55 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

