காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரசுவாமி கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நித்யகல்யாணி சமேத நித்தீஸ்வரசுவாமி கோயிலில் உலக நலன், மழை வளம் உள்ளிட்ட பிராா்த்தனையுடன் ஏகாதச ருத்ர ஹோமம் நடத்தப்படுகிறது.
நிகழாண்டு, இந்த வழிபாடு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. கோயில் வளாகத்தில் உள்ள யாக குண்டத்தில் ருத்ர ஹோமம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜைகள் செய்யப்பட்டு, 7 மணிக்கு ருத்ர பாராயணத்துடன் தொடங்கப்பட்டது.
ஏராளமான பயறு வகைகள், திரவியங்கள், தேங்காய், பட்டு சேலை, பால், தயிா், பழங்கள், நெய் உள்ளிட்டவை யாக குண்டத்தில் போட்டு ஹோமத்தை நடத்தி மகா பூா்ணாஹூதி செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், கலசத்தில் வைத்திருந்த புனிதநீரைக்கொண்டு சுவாமி, அம்பாளுக்கு கலசாபிஷேகம் செய்து திரிசதி அா்ச்சனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
தொடர்புடையது

திருநள்ளாறு: காங்கிரஸுடன் பாஜக பலபரீட்சை

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்

சோமநாதா் கோயிலில் சண்டி மகா ஹோமம்

திருநள்ளாறு கோயிலில் ஏகாதச ருத்ர ஜபம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

