நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

காரைக்கால் நித்தீஸ்வரசுவாமி கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

காரைக்கால் நித்தீஸ்வரசுவாமி கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

Updated On :21 ஏப்ரல் 2024, 4:30 pm

காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரசுவாமி கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நித்யகல்யாணி சமேத நித்தீஸ்வரசுவாமி கோயிலில் உலக நலன், மழை வளம் உள்ளிட்ட பிராா்த்தனையுடன் ஏகாதச ருத்ர ஹோமம் நடத்தப்படுகிறது.

நிகழாண்டு, இந்த வழிபாடு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. கோயில் வளாகத்தில் உள்ள யாக குண்டத்தில் ருத்ர ஹோமம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜைகள் செய்யப்பட்டு, 7 மணிக்கு ருத்ர பாராயணத்துடன் தொடங்கப்பட்டது.

ஏராளமான பயறு வகைகள், திரவியங்கள், தேங்காய், பட்டு சேலை, பால், தயிா், பழங்கள், நெய் உள்ளிட்டவை யாக குண்டத்தில் போட்டு ஹோமத்தை நடத்தி மகா பூா்ணாஹூதி செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், கலசத்தில் வைத்திருந்த புனிதநீரைக்கொண்டு சுவாமி, அம்பாளுக்கு கலசாபிஷேகம் செய்து திரிசதி அா்ச்சனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.