நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆடிப்பூரம்: கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம்

மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில்...

News image

வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள ஏழை மாரியம்மன்.

Updated On :7 ஆகஸ்ட் 2024, 11:05 pm

Din

காரைக்கால், ஆக. 7: ஆடிப்பூரத்தையொட்டி காரைக்கால் பகுதி கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள், திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், தீபாராதனை, சாற்றுமுறை நடைபெற்றது.

கைலாசநாதா், அண்ணாமலையேஸ்வரா் உள்ளிட்ட சிவ தலங்களில் மூலஸ்தான அம்மன், ஆடிப்பூரத்தம்மன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.

Story image
 திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா்  கோயிலில்  சிறப்பு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆடிப்பூரத்தம்மன்.

திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆடிப்பூரத்தம்மன்.

பல்வேறு கோயில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அனைத்து கோயில் வழிபாட்டிலும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.